திருமண விழாவில் சாப்பிட்ட 2 பேர் பலி

வடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 27 வயது வாலிபருக்கும், பள்ளி நீரோடை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது ஒரு பெண்ணுக்கும் கடந்த 3ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் குள்ளஞ்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் காலை உணவு பரிமாறப்பட்டது. திருமண விழாவுக்கு வந்த இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் சாப்பிட்டனர்.

இதில், புலியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடம் (65), கிருஷ்ணமூர்த்தி(61), ராஜமாணிக்கம் மகன் ராஜ்குமார்(27), நாராயணசாமி(55) உள்பட 120க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம், நாராயணசாமிஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு