மக்களவை தேர்தல் என்பது மக்களுக்கும் மோடிக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மக்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். வாக்காளர்கள் எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி அளிக்கவில்லை. குறிப்பாக, ஒரு நபர், ஒரே முகம் என்ற அடிப்படையில் வாக்கு சேகரித்த பாஜவுக்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் கிடைத்த தோல்வி. இது பாஜவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பு’’ என்றார்.