இந்த நிலையில் ஒன்றிய அரசிடம் மாநில அரசு நிதி கேட்டால், ஒன்றிய அரசு என்ன ஏடிஎம்மா? என கேட்டதற்கு அமைச்சர் உதயநிதி, நாங்கள் மாநில அரசு வழங்கிய வரிப்பணத்தில் இருந்து தான் கேட்கிறோம் என்று கூறினார். அதற்கு நிர்மலா சீதாராமன் ஆவேசமாக அறிவுரை வழங்குகிறார். பிறருக்கு அறிவுரை சொல்வதற்கு முன்பு தான் அதற்கு தகுதியானவராக நடந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், அடாவடித்தனமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக நிர்மலா சீதாராமன் பேசுகிறார். தமிழ்நாட்டுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் அப்பட்டமாக எதிராக செயல்படும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிக்கிறோம்.