தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற புதுப்புது கதை சொல்லும் மோடி; அமைச்சர் சிவசங்கர் கிண்டல்

அரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: இலவசமாக மக்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என மோடி சொல்கிறார். ஆனால் பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் இலவச திட்டங்களை செயல்படுத்துகின்றனர். தேர்தல் வர உள்ளதால் நம்மை ஏமாற்ற மோடி தமிழகத்திற்கு 10 நாளைக்கு ஒரு முறை வந்து புதுசு புதுசா கதை சொல்கிறார்.

கடந்த பத்தாண்டு ஆட்சியில் மோடி சொன்னதை எதையாவது செய்து உள்ளாரா? நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனத்தை தொழிலதிபர்களுக்கு விற்கும் ஏஜென்ட்டாக தான் மோடி செயல்படுகிறார். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும். மோடி தலைமையிலான ஆட்சி வீழ வேண்டும் என்றார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை