இதனையடுத்து கமலேஷ், தனது நண்பர்களான கொட்டிவாக்கம் நித்தியானந்த் (27), பெரும்பாக்கம் பார்த்திபன் (31) ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு ஏற்பட்ட தகராறில், கமலேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் கவுதமை வெட்டினார். இதில், பலத்த கயாமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கமலேஷ், நித்யானந்த், பார்த்திபன் ஆகியோர் திருவான்மியூர் போலீசில் சரணடைந்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கொட்டிவாக்கம் இளங்கோ நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குணசேகரன் (46), கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் சதீஷ் ராஜ் (31) ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.