பேளுக்குறிச்சி அருகே மோளப்பாளையம் பகுதியில், நள்ளிரவு 11.30 மணி அளவில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பின் முன்பகுதி நொறுங்கி, இடிபாடுகளில் சிக்கி 3பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து பேளுக்குறிச்சி போலீசார் சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிந்து மூவரும் நள்ளிரவில் எதற்காக ராசிபுரம் சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த வனவர் ரகுநாதன் உடலுக்கு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கலெக்டர் உமா மற்றும் அரசு அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.