இதில் நிலம் சம்பந்தமாக 70 மனுக்களும், சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 42 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 25 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 53 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 62 மனுக்களும் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து, மானியத்துடன் கூடிய விவசாய நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார். ந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் (பொது), சத்யபிரசாத் (தேர்தல்), வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வராணி, தட்கோ மாவட்ட மேலாளர் சரண்யா, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.