Thursday, September 19, 2024
Home » மக்கள்குறைதீர் கூட்டத்தில் .50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார்

மக்கள்குறைதீர் கூட்டத்தில் .50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார்

by Mahaprabhu

திருவள்ளூர்: மக்கள்குறைதீர்கூட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுபிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 252 மனுக்களை வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 70 மனுக்களும், சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 42 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 25 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 53 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 62 மனுக்களும் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து, மானியத்துடன் கூடிய விவசாய நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார். ந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் (பொது), சத்யபிரசாத் (தேர்தல்), வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வராணி, தட்கோ மாவட்ட மேலாளர் சரண்யா, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

14 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi