சென்னை : மக்களுக்கு இடையூறு இல்லாமல் இறுதி ஊர்வலங்களை நடத்துவது தொடர்பாக விதிகளை வகுப்பது குறித்து விளக்கம் தர ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தில் சாலையில் வீசப்பட்ட மாலையால் இளைஞர் உயிரிழந்தார். இறுதி ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்த விதிகள் வகுக்கக் கோரி அன்புச்செல்வன் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.