மதுராந்தகம் பகுதியில் இருவேறு விபத்தில் 3 பேர் பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் நேற்று நடந்த இருவேறு விபத்தில் 3 பேர் பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே நேற்று ஒன்றன்பின் ஒன்றாக 3 வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் மினி லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மதுராந்தகம் பகுதியில் நேற்று நடந்த இருவேறு சாலை விபத்தில் 3 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்