நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள் என என்.டி.ஏ. எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதிலுரை தர உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி; நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள். மக்கள் நலனுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் பாடுபட வேண்டும். நாடாளுமன்ற விதிகள் மற்றும் மரபுகளை பின்பற்றி செயல்படவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் பிரதமரின் வழிகாட்டுதல்படி செயல்படுவதாக உறுதி அளித்தனர்.

 

Related posts

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு