அவர் தர மறுக்கவே, 5 பேரும் சேர்ந்து, கத்தியால் சரமாரியாக அவரை தலையில் வெட்டிவிட்டு பைக்கில் தப்பி சென்றனர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் பைக் பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அதில், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பவன்குமார்(21), மாதவரம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வர்ஷன்(22), புத்தாகரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(23), கோகுல்(21), சரண் (19) என்பது தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.