பாம்பை பிடித்து வீடியோ வெளியீடு பெண் உள்பட 2 பேர் கைது

கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (50), சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி (44). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய எலி பாம்பு ஒன்றை பிடித்து வீடியோ பதிவு செய்தனர். அதில், உமா மகேஸ்வரி மனிதர்களிடம் இருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதர்களையும் காப்போம் எனவும், பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம்.

உங்கள் பகுதியில் பாம்புகள் இருந்தால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கவும் என கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக, அப்துல் ரகுமான், உமா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related posts

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு