ஓய்வூதியதாரர்கள் நேர்காணலை எளிமையாக்க புதிய நடைமுறை

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில் பின்வரும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன்படி,
* சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும்,
* குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதத்திலும்,
* சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் ஓய்வுப்பெற்ற மாதத்திலும் நேர்காணலுக்கு வர வேண்டும்.
இருப்பினும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கும் தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும் மேலும் www.karuvoolam.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கடையின் பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை

குறைவான வரி செலுத்தி மோசடி: ஆம்னி பேருந்து பறிமுதல்

முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ