‘PEGASUS’ மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அடுத்த வாரம் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக பலர் புகார் அளித்து வந்த நிலையில் அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் ‘PEGASUS’ சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த ‘Forbidden Stories’ என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த ‘THE WIRE’ மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில், இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெகாசஸ்  விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், பெகாசஸ் விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இது தொடர்பாக பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் மனுக்களை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது….

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு