பாஜ ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடிக்கு அழைப்பு ஓபிஎஸ்சுக்கு ‘பெப்பே’

சென்னை: டெல்லியில் வருகிற 18ம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜ அழைப்பு விடுத்துள்ளது.பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜ தீவிரமாக உள்ளது. இதனால் டெல்லியில் வருகிற 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாரதிய ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று வரை அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் தமிழகத்தில், பாமக மற்றும் தமாகா தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி ஆய்வு..!!

அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழல்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!!