இதன்பின்னர் வேனின் உள்ளே சிக்கியிருந்த டிரைவர் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வ மகாராஜன்(38), கிளீனர் கலையரசன் ஆகியோரை மீட்டனர். காயம் அடைந்திருந்த 2 பேரையும் உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சுரங்கப்பாதையில் கவிழ்ந்த பால்வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்து விசாரிக்கின்றனர்.