அடகு கடையில் நகை கொள்ளை

ஆவடி: திருநின்றவூர், நாராயணசாமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மயூர் (32). இவர், திருநின்றவூர் ஸ்ரீராம் நகரில் அடகு கடை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 6 சவரன் நகை மற்றும் 450 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!