இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் நடைபாதையை சேதப்படுத்தி மரக்கன்றுகள் நட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி மரக்கன்றுகளை நட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் பாதுகாப்புடன் நடைபாதையில் அனுமதியின்றி நட்டப்பட்ட மரக்கன்றுகளை அகற்றினர். இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நல சங்க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதியின்றி நடைபாதையை சேதப்படுத்தி மரக்கன்றுகள் நடத்தது குற்றம் என தெரிவித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அங்கிருந்து அகற்றப்பட்ட மரக்கன்றுகளை வேறு இடத்தில் நட்டு வைத்தனர்.