இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தில் பவதாரிணி உடல் கொண்டு வரப்பட்டது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்த பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பவதாரிணியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது மூத்த சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். பவதாரிணியின் உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து பவதாரிணியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலை நாளை சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.