நேற்று முன்தினம் இக்கோவில் கணபதி ஹோமத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள்,உச்சிக்கால பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகள் மீது அம்மன் பஞ்சவாத்ய மேளத்தாளத்துடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து விஷேச நிகழ்ச்சியில் பல்வேறு வேடங்கள் தரித்த கலைஞர்கள் மேளத்தாளத்துடன் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அம்மன் திருவீதியுலா யானை மீது பஞ்சவாத்யத்துடன் நடைபெற்றது. பட்டாம்பி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கோவில் மைதானத்தில் திரளாக திரண்டிருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் திருவீதியுலாவில் கேளி,தையம்,கரிங்காளி,சிங்காரிமேளம்,காவடியாட்டம் என வேடங்களின் நடனங்கள் இடம்பெற்றிருந்தன.