மதுரை: பட்டா வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி வட்டாட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர். தனக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி தண்டாயுதம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டும் 12 ஆண்டுகளாக திருச்சி வட்டாச்சியர் பட்ட வழங்கவில்லை. வட்டாட்சியரின் ஒரு மாத ஊதியத்தை ஏன் அபராதமாக விதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.