இந்தநிலையில் வலியை தாங்க முடியாத அவர், நேற்று அதிகாலை மருத்துவமனையின் புதிய கட்டிடம், எஸ்எஸ்பி பிளாக், 4வது மாடிக்கு சென்று, அங்கியிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் தொண்டை மற்றும் கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னா உயிரிழந்தார். தகவலறிந்த ஸ்டான்லி மருத்துவமனை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியது.