Saturday, July 6, 2024
Home » பத்தனம் திட்டா அருகே 3 ஆண்டாக மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 98 ஆண்டு சிறை

பத்தனம் திட்டா அருகே 3 ஆண்டாக மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 98 ஆண்டு சிறை

by Karthik Yash

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மான்னார் பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவருக்கு 2 மனைவிகளும், 5 குழந்தைகளும் உள்ளனர். முதல் திருமணத்தை மறைத்து ரான்னி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2வதாக திருமணம் செய்தார். அவருக்கு முதல் திருமணத்தில் 3 குழந்தைகளும், 2 வது திருமணத்தில் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் 2வது மனைவி மூலம் பிறந்த 11 வயதான மூத்த மகளை கடந்த 2019 முதல் 2022 வரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆபாச வீடியோக்களை காண்பித்தும், மிரட்டியும் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இந்த விவரம் சிறுமியின் தாய்க்கு தெரியாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு மகளை தந்தை பலாத்காரம் செய்வதை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் இது குறித்து உடனடியாக சிறுமியின் தாயிடம் தெரிவித்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ரான்னி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுமியின் தந்தைக்கு 98 வருடம் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து பத்தனம் திட்டடா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

You may also like

Leave a Comment

nine + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi