திருவான்மியூரில் படப்பை மனோகரன் இல்ல திருமண வரவேற்பு விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்

தாம்பரம்: திருவான்மியூரில் நடந்த படப்பை மனோகரன் இல்ல திருமண வரவேற்பு விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரும் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான படப்பை ஆ.மனோகரன்-குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோரின் மகன் ம.வெற்றிசெல்வன், எச்.ஜோஷ்வா ஐசக்-கிரேஸ்லின் ஐசக் ஆகியோரின் மகள் ஜோ.ஜெசிக்கா ஏஞ்சலின் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ெஜகத்ரட்சகன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கிரிராஜன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்ரமணியன், சேகர்பாபு, ஏ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏக் கள் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், நிர்வாகிகள்ஒரத்தூர்.கே. சுந்தர், ஏழுமலை, நந்த கோபால், பார்த்தசாரதி, திருமுடிவாக்கம் மணி, வந்தே மாதரம், நடுவீரப் பட்டு சுப்ரமணி, ஆடல் அரசு, தமிழ் அமுதன், எஸ்.கர்ணன், ஜனார்த்தனன், கோபாலக்கிருஷ்ணன், இளைஞரணி அறிவொளி, மாணவரணி ஜமிர் மற்றும் திமுக முன்னணி
யினர் கலந்துகொண்டனர்.

Related posts

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடும் பணி தீவிரம்

ஆகஸ்ட் 02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு