இந்நிலையில் முன்னீர்பள்ளம் சுடலை மகன் விளாகம் சுரேஷ்(21), பாளை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் நம்பிராஜன்(21) ஆகிய இருவரையும் பாளை. போலீசார் கைது செய்தனர். தீபக்ராஜன் கொலை வழக்கு தொடர்பாக சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி நம்பிராஜன் இருவரையும் பாளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இதில் சுரேஷ் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திலும், நம்பிராஜன் பாளை. ஐகிரவுண்டு காவல் நிலையத்திலும் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபக்ராஜன் கொலை வழக்கு தொடர்பாக பவி என்ற பவித்ரன், முத்து, காசிராமன், இசக்கிதுரை உள்ளிட்ட சிலரை பாளை போலீசார் தேடி வருகின்றனர்.