பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது

நெல்லை: பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலையில் மேலும் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பசுபதி பாண்டியன் ஆதரவாளரான தீபக் ராஜன். கடந்த 20ம் தேதியன்று பாளை. கேடிசி நகர் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இதுவரை ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், மேலநத்தம் முத்துசரவணன், லட்சுமிகாந்தன், சரவணன், கூலிப்படை தலைவன் நவீன், லெப்ட் முருகன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சுரேஷ், பவித்ரன், முத்து, நம்பிராஜ், காசிராமன், இசக்கிதுரை உள்ளிட்டவர்களை தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் முன்னீர்பள்ளம் சுடலை மகன் விளாகம் சுரேஷ்(21), பாளை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் நம்பிராஜன்(21) ஆகிய இருவரையும் பாளை. போலீசார் கைது செய்தனர். தீபக்ராஜன் கொலை வழக்கு தொடர்பாக சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி நம்பிராஜன் இருவரையும் பாளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இதில் சுரேஷ் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திலும், நம்பிராஜன் பாளை. ஐகிரவுண்டு காவல் நிலையத்திலும் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபக்ராஜன் கொலை வழக்கு தொடர்பாக பவி என்ற பவித்ரன், முத்து, காசிராமன், இசக்கிதுரை உள்ளிட்ட சிலரை பாளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்