பர்வதமலையில் பவுர்ணமியையொட்டி 4,560 அடி உயர மலை உச்சியில் விடியவிடிய பக்தர்கள் தரிசனம்

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் தென்கயிலாயம் என அழைக்கப்படும் 4,560 அடி உயர பர்வத மலையில் பழமையான பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆடி மாத பவுர்ணமியொட்டி நேற்று மாலை முதல் பக்தர்கள் விடிய விடிய மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமை மலையேறி சென்று வழிபட்டால் மூன்று லோகங்களையும் வணங்கக்கூடிய நன்மை ஏற்படும் என்றும் ஞாயிறுக்கிழமையில் மலையேறி சென்று தரிசித்தால் கடன் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அபிஷேக பொருட்களுடன் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக மலையடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் பக்தர்களுக்கு கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை