இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமை மலையேறி சென்று வழிபட்டால் மூன்று லோகங்களையும் வணங்கக்கூடிய நன்மை ஏற்படும் என்றும் ஞாயிறுக்கிழமையில் மலையேறி சென்று தரிசித்தால் கடன் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அபிஷேக பொருட்களுடன் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக மலையடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் பக்தர்களுக்கு கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.