கட்சியை காட்டிக்கொடுத்த துரோகி ஓபிஎஸ்சுக்கு டீக்கடை பாய்லர் அல்ல… இஞ்சி டீ சின்னம் தான்: சுக்குநூறா நொறுக்கிட்டாரே வைகை செல்வன்

சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்று முன்தினம் இரவு, ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைசெல்வன் கலந்துகொண்டு பேசியதாவது: அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர்., மக்களை காப்பாற்ற கேடயமாக நின்றவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அதிமுக இருக்காது என்றார்கள். அப்போது புரட்சித்தலைவி இயக்கத்தை தூக்கி நிறுத்தி ஆட்சி பீடத்தில் அமரவைத்தார். அவருக்குப் பிறகு எடப்பாடியார் அதிமுகவை வழிநடத்திச் செல்கிறார். பெரிய அய்யா ஒருவர் உள்ளார். அவர் கட்சியை காட்டிக் கொடுத்த துரோகி பன்னீர்செல்வம். அவரது வழக்கு ரெடியாக உள்ளது. கடவுள் கொடுத்த சின்னத்தில் போட்டியிடுவதாக கூறுகிறார். கடவுள்தான் அவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுப்பாரா?

டீக்கடை பாய்லர் சின்னத்தில் போட்டியிடுவதாக கூற வேண்டும் அல்லது இஞ்சி டீ சின்னத்தில் போட்டியிடுவதாக கூறவேண்டும். அதிமுகவை மீட்கப்போவதாக ஓபிஎஸ் கூறுகிறார். ஏற்கெனவே அதிமுகவை எடப்பாடியார் மீட்டு விட்டார். ஓபிஎஸ் நாதஸ்வரம் அல்லது வீணை இருந்தால் மீட்டட்டும். மன்னார்குடி மாபியாக்களிடம் இருந்து அதிமுகவை மீட்டு விட்டார் எடப்பாடியார். தமிழகம் வந்த பிரதமர் எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் நல்லாட்சி தந்தவர்கள் என்று பாராட்டி சென்றுள்ளார். இப்படி பாராட்டுவதால் நாங்கள் பாஜவுடன் கூட்டணி சேரமாட்டோம். பாஜவோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இனிமேல் எப்போதும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்