அவர்களை வேறு எப்படி அழைக்க முடியும்?. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் (கட்சியில் இருந்து வெளியேறியவர்கள்) ஐந்து ஆண்டுகளாக கூடவே இருந்தனர். கடைசி நேரத்தில் ஓடிவிட்டனர். லோக்சபா தேர்தலுக்கு முன், மகேந்திர ஜீத் சிங் மாளவியா, லால்சந்த் கட்டாரியா, ராஜேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். கட்சியை விட்டு வெளியேறிய அவர்களில் பலருக்கு அமைச்சர் முதல் பல பதவிகளை வழங்கினேன். கட்சிக்கு துரோகம் இழைத்த இன்னும் சிலர், கட்சிக்குள் இருக்கின்றனர். அவர்கள் காங்கிரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்றார்.