தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கச்சதீவிற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே 2 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை கைது செய்தும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும் என்று இலங்கை அரசிற்கு தெரிந்து இருந்தும் கூட அவை மெத்தன போக்கை கடைப்பிடிப்பது வருத்தம் அளிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.