ஒன்றிய சனாதான சக்திகளை எதிர்த்து நின்றவர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகளை பார்த்த பிறகு தான் இந்திய அளவில் பல்வேறு தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிற இந்தியா கூட்டணி என்பதை எவரும் மறந்திட முடியாது. ஆகவே மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் ஜனநாயகத்தை காக்கவும் சமூக நல்லிணக்கத்தை பேணவும்; இன, மொழி, மண்ணைக் காக்கவும் உயர்ந்து நிற்கக்கூடிய சிறந்த தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள் அவரை விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வாழ்த்தி வரவேற்கிறது.