கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி: சீமான் பரபரப்பு பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் சீமான் அளித்த பேட்டி: அம்பேத்கர், பெரியாருக்கு விஜய் மாலை போட்டதை வரவேற்கிறேன். அதேபோல் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திருவிக உள்ளிட்டோருக்கும் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.ஒற்றை கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம். சிலர் கட்சியிலிருந்து அவர்களாக போகிறார்கள்.

அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை. அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள். பட்டுப்போன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும், அதை பொருட்படுத்த வேண்டாம். மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்றால் அவர்கள் அங்கு போய் என்ன பேசுவார்கள், மதுவை ஒழிக்க வேண்டும் என்றா பேசுவார்கள். 2026லும் தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்