பெண் நிருபருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கட்சி நிர்வாகி கைது

திருவனந்தபுரம்: கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானியின் உடல்நலம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக செல்போனில் தொடர்புகொண்டபோது ஆபாச தகவல்களை அனுப்பிய மதானி கட்சியின் பொதுச் செயலாளர் நிசார் மேத்தரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட தந்தையை சந்திப்பதற்காக கேரளா செல்ல மதானிக்கு உச்சநீதிமன்றம் 12 நாள் தற்காலிக அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து மதானி பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் கொச்சி சென்றார். கொச்சியில் வைத்து அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மதானியின் உடல் நலம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஒரு மலையாள பெண் நிருபர், மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான நிசார் மேத்தர் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் பெண் நிருபரிடம் ஆபாச தகவல்களை அனுப்பியதாக கொச்சி கடவந்திரா போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு அவரை போலீசார் விசாரணைக்காக கடவந்திரா போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவரது செல்போனை பரிசோதித்ததில் பெண் நிருபருக்கு ஆபாச தகவல்களை அனுப்பியது நிரூபணமானது. இதையடுத்து நிசார் மேத்தரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்