இதையடுத்து உத்தரபிரதேச எல்லையில் அமைந்துள்ள புந்தேல்கண்ட், விந்தியா பகுதிகளில் சமாஜ்வாடி கட்சியை வலுப்படுத்த தனி அலுவலகங்களை திறக்க கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சந்தர்பூர் மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கஜுராகோவில் 6,500 சதுரஅடி நிலத்தை சமாஜ்வாடி வாங்கி உள்ளது. அங்கு புதிய அலுவலகம் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.