நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உரிய நேரத்தில் அறிவிப்போம் : ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று ஜி.கே.வாசன் கூறினார். தமாகா மாணவர் அணியின் 10வது செயற்குழு கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். மாணவர் அணி தலைவர் பி.கே.சங்கர், துணை தலைவர் அஸ்வின் சந்தர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடர்ந்து, ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை அதிகரித்து வருகிறோம். கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி இப்போது பேச தேவை இல்லை. தற்போது களப்பணி செய்யக் கூடிய நேரம். கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், சக்தி வடிவேல், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், அசோகன், பொதுச் செயலாளர் ராஜம் எம்.பி.நாதன், வர்த்தக அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, இலக்கிய அணி தலைவர் கே.ஆர்.டி.ரமேஷ், மகளிரணி தலைவி ராணி கிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாஷா, கோவிந்தசாமி, நெடுஞ்செழியன், தொழிற்சங்க தலைவர் இளவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி