நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: அன்புமணி பரபரப்பு பேட்டி

மதுரை:நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மதுரையில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.மதுரையில் நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, கேரளாவில் முல்லை பெரியாறு அணைக்கு நிகராக ஒரு புதிய அணையை கட்டுவோம் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்