சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது சென்னையில் ரூ.2.60 கோடி, சேலத்தில் ரூ.70 லட்சம், திருச்சியில் ரூ.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.