ஈரோடு: ஈரோட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது எனவும் கூறினார்.