சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆம் ஆத்மி, பார்வர்டுபிளாக் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளதால் ஆம் ஆத்மி, பார்வர்டுபிளாக் கட்சிகள் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு ஆதவு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எண்ணிக்கை அளவிலான தொகுதிகல் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆகவுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலா 2 இடங்கள், மக்களை தேர்தலுக்கு ஒதுக்கபட்டுள்ள நிலையில் எந்தெந்த இடங்கள் என்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் திமுக கூட்டணியில் மார்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. நாங்கள் போட்டியிட்டு வென்ற கோவையை திமுகவுக்கும் திமுக வென்ற திண்டுக்கல் தொகுதியை எங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என மார்சிஸ்ட் கட்யின் பொதுசெயலாளர் கோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த தேர்தலில் நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வென்று இருந்தது.