இந்நிலையில், ஏபிபி-சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் கேரளாவில் காங்கிரஸ் கட்சி தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றனர். பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.