டெல்லி : மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா மற்றும் உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆய்வு செய்தனர்.மக்களவையில் சி.ஆர்.பி.எப். இயக்குநர் உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.