Saturday, July 6, 2024
Home » நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

by Lavanya

டெல்லி: நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு வைத்துள்ளார். 18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். இதைத்தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று மக்களவையில் மோடி பேசிய நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசினார்.

மாநிலங்களவையில் குடியரசுத்தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் மோடி உரையின்போது, அரசியல் சாசனம் குறித்து பேசினார். தொடர்ந்து அரசியல் சாசனம் குறித்து பேசி வந்த மோடிக்கு, எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அரசியல் சாசனம் குறித்தும், தேர்தல் குறித்தும், தேர்தல் முடிவு குறித்தும் மோடி கூறியது உண்மைக்கு புறம்பான தகவல் என்றும், இதுகுறித்து விளக்குவதற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்குமாறும் எதிர்க்கட்சிகள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் வழக்கம்போல் மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்கவில்லை. இதனால் மோடியின் உரைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்படியிருந்தும் மோடி, தனது பேச்சை தொடர்ந்து வந்தார். இதனால் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேச கூட போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். பிரதமரின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. நாடாளுமன்றத்திலேயே பொய்யான தகவல்களை பிரதமர் மோடி பேசுகிறார் என திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi