பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு..!!

பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீ. தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர். சரப்ஜோத் சிங் ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 3 (வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related posts

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!

எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!