பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் மனு பாக்கர் 3ம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.
2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வாங்கிய முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் எக்ஸ் தளத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று கொடுத்த மனுவுக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் அலுவல் தொடங்கியதுமே மனு பாக்கருக்கு வாழ்த்து கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.