பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழர்.. 24 வயதாகும் விஷ்ணு சரவணன் 2-வது முறையாக தகுதி..!!

பாரீஸ்: பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் படகுப் போட்டிக்கு தமிழரான ராணுவ வீரர் விஷ்ணு சரவணன் தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றவர். மும்பையில் ராணுவ அதிகாரியாக பணிபுரியும் விஷ்ணுவின் தந்தை சரவணன், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 24 வயதாகும் விஷ்ணு சரவணன், ராணுவத்தில் சுபேதராக பணிபுரிந்து வருகிறார்.

ஐ.எல்.சி.ஏ.-7 உலக சாம்பியன் படகுப் போட்டியில் பங்கேற்ற விஷ்ணு சரவணன், 26-வது இடத்தை பிடித்ததன் மூலம் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற விஷ்ணு சரவணன், தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் படகுப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விஷ்ணு சரவணன் படைத்துள்ளார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு