பரவை கிராமத்தில் நூலகத்தை இடித்து அகற்றி வணிக வளாகம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதிப்பு

மதுரை: பரவை கிராமத்தில் நூலகத்தை இடித்து அகற்றி வணிக வளாகம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வணிக வளாக கட்டுமானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனு குறித்து மதுரை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பரவை கிராமத்தில் உள்ள பொது மந்தை திடல் அருகே கலை அரங்கம், பொது வாசகர் நூலகமாக உள்ளது என மனு தாக்கல் செய்துள்ளார். புதிய வாசக சாலை அமைக்க உள்ளதாகக் கூறி சில தனி நபர்கள் வணிக வளாகம் கட்டி வருவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது எனக் கூறிய நீதிபதி, கட்டுமானத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Related posts

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு