முக்கிய சாலைகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

திருவொற்றியூர்: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி, பதற்றம் இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக காவல்துறை – துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று பூக்கடை பகுதியில் நடைபெற்றது.

இதில் பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட உதவி ஆணையாளர்கள் தட்சிணாமூர்த்தி, ஸ்ரீகாந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பங்கேற்றனர். பிரகாசம் சாலை மற்றும் பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட முக்கிய சாலைகள், வாக்குச் சாவடி மையம் வழியாக பேண்ட் வாத்தியங்கள் முழுங்க போலீசார் அணி வகுத்துச் சென்றனர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!