இந்த ஆண்டு ஊரணியில் முளைப்பாரி ஓடுகளை கரைப்பதற்கு அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றம் நிலவியதால் ஊரணியில் கரைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்த கிராமமக்கள் போலீசார் அனுமதிகோரி ஊரணி கரையில் காத்திருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் எதிர்ப்பை மீறி ஊரணியில் இறங்கிய பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.