Saturday, June 29, 2024
Home » பாப்பாக்குடி அருகே காருக்குள் சிக்கிய சிறுமி மூச்சு திணறி பலி?: போலீசார் விசாரணை

பாப்பாக்குடி அருகே காருக்குள் சிக்கிய சிறுமி மூச்சு திணறி பலி?: போலீசார் விசாரணை

by Suresh

பாப்பாக்குடி: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கனகா (29). இவரது கணவர் முக்கூடலை சேர்ந்த மாரியப்பன். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக கணவரை பிரிந்து மகள் சரண்யாவுடன் (7) தனியாக வசித்து வருகிறார். சரண்யா அப்பகுதியில் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சிறுமி சரண்யா அப்பகுதியிலுள்ள பழனிக்குமார் என்பவரின் காரின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் வேலைக்கு சென்று வீடு திரும்பிய கனகா, மகளை காணாததால் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது காரில் மயங்கிய நிலையில் சரண்யா கிடந்தது தெரியவந்தது.

உடனே சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi