கடலூர்: பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கதிரவன் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசன் என்ற துப்புரவு பணியாளரின் சம்பள நிலுவைத் தொகையை வழங்க லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளார். சம்பள நிலுவைத் தொகையை வழங்க ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய போது உதவியாளர் கதிரவனை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.